திருமலை: ஐதராபாத் கால்நடை பெண் மருத்துவர் கொலை வழக்கில் விரைவு நீதிமன்றம் அமைக்க உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தெலங்கானாவின் சம்ஷாபாத்தை சேர்ந்த கால்நடை பெண் மருத்துவரை கடந்த 27ம் தேதி லாரி டிரைவர் மற்றும் கிளீனர்கள் நான்கு பேர் இணைந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக்கொலை செய்தனர். குற்றவாளிகள் 4 பேரையும் நடுரோட்டில் வைத்து என்கவுன்டர் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என மகளிர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. இந்நிலையில், குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைப்பதற்காக விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தெலங்கானா மாநில நீதித்துறை அமைச்சர் இந்திர கிரண், டாக்டர் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்கும் விதமாக விரைவு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.ஐதராபாத் கால்நடை பெண் மருத்துவர் கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க விரைவு நீதிமன்றம்: உயர் நீதிமன்றம் அனுமதி
- நீதிமன்றம்
- ஹைதெராபாத்
- டாக்டர்
- குற்றவாளிகள்
- உயர் நீதிமன்றம்
- ஹைதராபாத் ஹைதராபாத் கால்நடை அறுவை சிகிச்சை கொலை வழக்கு வேகமாக நீதிமன்றம்