சவோ பாவ்லா: போலீசார் துரத்தியபோது, விழாக்கூட்டத்தில் புகுந்துக் கொண்ட குற்றவாளிகள், கூட்டத்தில் இருந்தபடி துப்பாக்கியால் சுட்டனர். இதில் அப்பாவிகள் 9 பேர் உயிரிழந்தனர்.பிரேசில் நாட்டின் சவோ பாவ்லா நகரில் நேற்று முன்தினம் போலீசாரிடம் சிக்காமல் இருசக்கர வாகனத்தில் 2 குற்றவாளிகள் தப்பிச் சென்றனர். அவர்களை பிடிப்பதற்காக பின்னாலேயே போலீசார் துரத்தினர். போலீசார் துரத்தி வருவதைக் கண்ட குற்றவாளிகள், அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக சினிமாவில் வரும் சம்பவம்போல், அங்கு நடந்து கொண்டிருந்த விருந்து நிகழ்ச்சி ஒன்றில் புகுந்து கொண்டனர். அதில் பெருமளவிலானவர்கள் கூடியிருந்ததாக தெரிகிறது.