வேலூர்: வேலூர் பெண்கள் சிறையில், அதிகாரிகள் பேச்சு ேதால்வியை அடுத்து 5வது நாளாக நளினி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் பெண்கள் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, விடுதலை தாமதம், பரோல் தாமதம் உள்ளிட்ட காரணங்களால் தன்னை கருணை கொலை செய்ய கோரி சிறைத்துறை மூலம் பிரதமருக்கு மனு அனுப்பி வைத்தார். தொடர்ந்து சாகும் வரை உண்ணாவிரதத்தை கடந்த 28ம் தேதி தொடங்கிய அவர், 5வது நாளாக நேற்றும் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களின் அறிக்கையை சிறைத்துறை ஏடிஜிபி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும் அனுப்பி வைத்தனர்.