துலே: மகாராஷ்டிராவில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வேன், பாலத்திலிருந்து கவிழந்ததில் 8 தொழிலாளர்கள் பலியாயினர், 12 பேர் படுகாயம் அடைந்தனர். மகாராஷ்டிரா மாநிலம், துலே மாவட்டத்தில் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு ஒரு வேன் புறப்பட்டது. விசூர் என்ற கிராமம் அருகே சலிசாகான்-துலே நெடுஞ்சாலையில், ஒரு பாலத்தை வேன் கடந்தபோது, அது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர்களை உடைத்துக் கொண்டு போரி ஆற்றில் விழுந்து மூழ்கியது. இந்த விபத்தில் 8 தொழிலாளர்கள் பலியாயினர், 12 பேர் படுகாயம் அடைந்தனர்.