சபரிமலையில் 12 நாளில் 8 லட்சம் பக்தர்கள் தரிசனம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் மண்டல கால பூஜைக்காக நடை திறந்த 12 நாட்களில் இதுவரை 8   லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இதனால், நேற்று வரை ரூ40 கோடி வருமானம் கிடைத்துள்ளது. கடந்தாண்டு இதேநாளில் ரூ21 கோடி மட்டுமே கிடைத்தது. பிந்து பேட்டி: சபரிமலைக்கு சென்று அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்தி வரும் கேரளாவை சேர்ந்த பிந்து அம்மிணி, கோட்டயத்தில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து மகளிர் அமைப்புகளை  சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளம்பெண்கள், ஜனவரி 2ம் தேதி சபரிமலை  செல்ல உள்ளனர். அப்போது நானும் செல்வேனா என்பது குறித்து இப்போது  உறுதியாக கூற முடியாது,’’ என்றார்.

Related Stories: