பெங்களூரு: கர்நாடக மாநிலத்திற்கு புதிய ஆளுநரை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடக மாநில ஆளுநராக இருப்பவர் வஜூபாய் ருடாபாய் வாலா (வி.ஆர்.வாலா). இவரது பதவிக் காலம் கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் முடிந்து விட்ட நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன் அவருக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்யப்பட்டது. டாக்டர்கள் அவரை முழு ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். வி.ஆர்.வாலாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை மாற்றிவிட்டு புதிய ஆளுநரை நியமனம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.