கர்நாடக கவர்னராகிறார் சுமித்ரா மகாஜன்? : விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்திற்கு புதிய ஆளுநரை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடக  மாநில ஆளுநராக இருப்பவர் வஜூபாய் ருடாபாய் வாலா (வி.ஆர்.வாலா). இவரது பதவிக் காலம் கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் முடிந்து விட்ட நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன் அவருக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்யப்பட்டது.  டாக்டர்கள் அவரை முழு ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். வி.ஆர்.வாலாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை மாற்றிவிட்டு புதிய  ஆளுநரை நியமனம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த பட்டியலில்  முன்னாள்  மத்திய அமைச்சர் உமாபாரதி, முன்னாள் மக்களவை சபாநாயகர் சுமித்ராமகாஜன் பெயர் இடம்பெற்றுள்ளது. இதில் உமாபாரதி மீது பாபர்  மசூதி இடிப்பு வழக்கு இருப்பதால், அவரை நியமிக்க மத்திய அரசு தயக்கம்  காட்டி வருவதாகவும், 5 ஆண்டுகள் மக்களவையை சிறப்பாக நடத்திய அனுபவம்  சுமித்ரா மகாஜனுக்கு இருப்பதால் அவரை நியமிக்க அரசு முடிவு  செய்துள்ளதாகவும், இரண்டொரு நாளில் அதிகாரபூர்வ அறிவிப்பு  வெளியாகும் என்று தெரிய வருகிறது.

Related Stories: