புதுடெல்லி: சிட்பண்ட் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேறியது. தனிநபர் அல்லது 4 நபர்களுக்கு குறைவானவர்கள் நடத்தும் சிட்பண்டில், பண உச்சவரம்பை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தவும், 4 பேருக்கும் அதிகமானோர் அல்லது நிறுவனங்கள் நடத்தும் சிட்பண்டில் பண உச்சவரம்பை ரூ.6 லட்சத்திலிருந்து ரூ.18 லட்சமாக உயர்த்தவும் சிட் பண்ட் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதில் போர்மேன் கமிஷன் 5 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. சிட்பண்டுக்கு அதிக மதிப்பளிக்கும் வகையில் இந்த மசோதாவில் சமூக நிதி, சுழற்சி சேமிப்பு, மற்றும் கடன் நிறுவனம் என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளன.