திரானா: அல்பேனியா நாட்டில் நேற்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், வீடுகளில் இருந்த மக்கள் அலறியடித்து கொண்டு வெளியேறி சாலைகளில் திரண்டனர். இந்த பூகம்பம் ரிக்டர் அளவில் 6.4 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. தலைநகர் திரானாவில் இருந்து வடமேற்காக 30 கிமீ தொலைவில் 20 கிமீ ஆழத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் உருவாகி இருந்தது. இதன் காரணமாக பல இடங்களில் வீடுகள் இடிந்தன. நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாயின. பெரும்பாலான கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கியதால் பொதுமக்கள் சாலையில் தஞ்சமடைந்தனர்.