நீட் ஆள்மாறாட்டம் உதித்சூர்யா தந்தைக்கு ஜாமீன்

தேனி: நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் உதித்சூர்யாவின் தந்தையான டாக்டர் வெங்கடேசனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு தொடர்பாக சென்னை மாணவர் உதித்சூர்யா உள்ளிட்ட மாணவர்கள், அவர்களது தந்தை, தாய் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் மாணவர்களுக்கு மட்டும் ஜாமீன் வழங்கப்பட்டது. பெற்றோருக்கு வழங்கவில்லை.

 உடல்நிலையை கருத்தில் கொண்டு தனக்கு ஜாமீன் கோரி, மாணவர் உதித்சூர்யாவின் தந்தையான டாக்டர் வெங்கடேசன், தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம், டாக்டர் வெங்கடேசனுக்கு நேற்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Related Stories: