ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலைக்கழகம் அருகே தீவிரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் 3 பேர் காயமடைந்துள்ளனர். மாநிலமாக இருந்த ஜம்மு-காஷ்மீர், ஜம்மு, லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இந்த அறிவிப்பு கடந்த அக்டோபர் 31ம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. அதாவது, ஜம்மு, லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் அன்று முதல் செயல்பட தொடங்கின. மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றுவதன் மூலம், ஆட்சி நிர்வாகத்தை தமது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும் எனவும், அதன் மூலம் பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டலாம் என்பது மத்திய அரசின் நோக்கம். தமது இந்த நோக்கத்தில் வெற்றிப் பெற, பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு தான் வருகிறது. இருப்பினும், ஜம்மு -காஷ்மீரில் சமீப காலமாக அவ்வப்போது பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்று தான் வருகிறது.
ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலைக்கழகம் அருகே கையெறி குண்டு வீசி தீவிரவாதிகள் தாக்குதல்: 3 பேர் படுகாயம்
- பயங்கரவாதிகள்
- காஷ்மீர் பல்கலைக்கழகத்திற்கு அருகில் ஸ்ரீநகர் கையெறி குண்டு தாக்குதல்
- காஷ்மீர் பல்கலைக்கழகம்