அரசியலமைப்பை பா.ஜனதா புறக்கணிக்கிறது: பிரியங்கா விமர்சனம்

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் பாஜவின் நடவடிக்கைளை காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். இதுகுறித்து பிரியங்கா காந்தி தனது டிவிட்டர் பதிவில், “எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி பாஜ ஆட்சி அமைத்துள்ளது. மகாராஷ்டிராவில் அரசியலமைப்பு மற்றும் நிறுவனங்களை பாஜ புறக்கணிப்பதை தொலைக்காட்சிகள் காட்டுகின்றன. கர்நாடகாவில் என்ன விளையாட்டை விளையாடியதோ அதே விளையாட்டையே மீண்டும் மகாராஷ்டிராவிலும் அரங்கேற்றியுள்ளது. 12 ஆயிரம் விவசாயிகள் மகாராஷ்டிராவில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு பாஜ அரசின் பாக்கெட்டில் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: