சென்னை: மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றுள்ள தேவேந்திர பட்நவிசுக்கு முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுப்பியுள்ள வாழ்த்து கடிதத்தில் கூறியிருப்பதாவது: மகாராஷ்டிரா முதல்வராக பொறுப்பேற்றுள்ள உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். மகாராஷ்டிராவில் முழுமையான ஆட்சி நடைபெற எனது வாழ்த்துக்கள்.