தாக்கா: ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் நடைபெறும் இளைஞர் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் அரை இறுதியில், பாகிஸ்தான் அணியுடன் மோதிய இந்தியா 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டது. மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் (வங்கதேசம்) நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த பாகிஸ்தான் இளைஞர் அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 267 ரன் குவித்தது. ஒமேர் யூசுப் 66, ஹைதர் அலி 43, கேப்டன் ரோகைல் நசீர் 35, சைப் பாதர் 47*, இம்ரான் ரபிக் 28 ரன் எடுத்தனர். இந்திய இளைஞர் அணி பந்துவீச்சில் ஷிவம் மாவி, சவுரவ் துபே, ஹ்ரித்திக் ஷோகீன் தலா 2, சித்தார்த் தேசாய் 1 விக்கெட் வீழ்த்தினர்.