மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி கண்களை கட்டிக் கொண்டு 5 கிமீ ஓடி காவலர் சாதனை

*20 நிமிடம் 12 நொடிகளில் கடந்தார்

வத்திராயிருப்பு :மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தியும், விவசாயத்தை ஊக்குவிக்கவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,  திருவில்லிபுத்தூர் அருகே போலீஸ்காரர் கண்களைக் கட்டிக்கொண்டு 5 கி.மீ தூரத்தை 20 நிமிடம் 12 நொடிகளில் ஓடி சாதனை புரிந்துள்ளார். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே கூமாப்பட்டி எஸ்.கொடிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மணிமுத்து (26). போலீஸ்காரர். இவர், மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தியும், விவசாயத்தை ஊக்குவிக்கவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வத்திராயிருப்பு - அழகாபுரி மெயின் ரோட்டில் கண்களைக் கட்டிக்கொண்டு சுமார் 5 கிமீ தூரத்தை 20 நிமிடம் 12 நொடிகளில் ஓடி நேற்று சாதனை படைத்தார். இந்த சாதனையை ‘நோபல் வேர்ல்டு ரெக்கார்டு குழுவினர்’ நேரடியாக பார்த்து அங்கீகரித்து சான்றிதழ் வழங்கினர்.

Related Stories: