சிதம்பரம் : பிரமோற்சவத்தை எதிர்த்து வழக்கு

சிதம்பரம்: சிதம்பரம் கோயிலுக்குள் அமைந்திருக்கும் கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு பிரமோற்சவம் நடத்துவதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. பிரமோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பிரமோற்சவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 1983-ல் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என அறநிலையத்துறை தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. கோவிந்தராஜ பெருமாள் கோயில் அறங்காவலர்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்க மனுதாரருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

The post சிதம்பரம் : பிரமோற்சவத்தை எதிர்த்து வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: