கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கில் ஏப்.29ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு..!!

விருதுநகர்: கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக தவறாக அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி மீது தொடரப்பட்ட வழக்கில், தீர்ப்பை 29ம் தேதிக்கு தள்ளிவைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்துவதாக கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் தேதி தனியார் கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி மீது ஒரு புகரான அருப்புக்கோட்டை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் நிர்மலா தேவி மீது வழக்குபதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு, சிபிசிஐடிக்கு இந்த வழக்கானது மாற்றப்பட்டு தொடர் விசாரணை நடைபெற்று வந்தது. மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கூறி மதுரை பேராசிரியர் நிர்மலா தேவி, பயிற்சி மாணவர் கருப்பசாமி, மதுரை காமராஜர் பல்கலை. உதவி பேராசிரியர் முருகன் ஆகிய 3 பேரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கில் 6 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. இறுதிக்கட்டமாக இன்று தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திற்கு வரும் முன்பு, நிர்மலா தேவி, தனக்கு உடல்நிலை சரியில்லை என்று அவரது வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். வழக்கில் தொடர்புடைய மதுரை காமராஜர் பல்கலை. உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக பதிவு செய்யப்பட்ட நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததால் தீர்ப்பு வரும் 29ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. ஏப்ரல் 29ல் கண்டிப்பாக தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கில் ஏப்.29ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: