சென்னை : சென்னை விமானநிலைய குப்பைத் தொட்டியில் ₹75 லட்சம் மதிப்பிலான நகைகள் கண்டெடுக்கப்பட்டது. குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றி சுங்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை நடைபெறுகிறது.