டேராடூன்: பொறுமை, ஒருமுகப்படுத்தும் திறனை அதிகரிப்பதற்காக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு 3 நாட்கள் வில்வித்தை பயிற்சி அளிக்கப்படுகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தின் தலைநகர் டேராடூன் அருகேயுள்ள முசோரியில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகளுக்கான பயிற்சி மையம் உள்ளது. இங்கு பயிற்சி பெறும் அதிகாரிகளுக்கு வில்வித்தை பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான 3 நாள் பயிற்சி நேற்று தொடங்கியது. இந்த பயிற்சியை வில் வித்தையில் 3 முறை சாம்பியன் பட்டம் பெற்றவரும், குஜராத் விளையாட்டு ஆணையத்தின் பயிற்சியாளருமான தினேஷ் பில் வழங்குகிறார். இவர் குஜராத்தில் தனியாக பயிற்சி மையம் அமைத்து பழங்குடியின இளைஞர்களுக்கு இலவசமாக வில்வித்தை பயிற்சி அளித்து வருகிறார்.