ஆவடி அருகே தந்தையை ஏமாற்றி வீட்டை அபகரித்த மகள்கள்: ஆட்சியர் நடவடிக்கையால் மீட்டு ஒப்படைப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் தந்தையை ஏமாற்றி மகள்கள் அபகரித்த சொத்து மீ்ட்கப்பட்டு மீண்டும் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆவடி அருகே திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரிடமிருந்து அவரின் மகள்கள் சொந்த வீட்டை ஏமாற்றி வாங்கி கொண்டதாக கூறப்படுகிறது. ரூ.60 லட்சம் மதிப்புள்ள வீடு ராஜாவின் இரண்டாவது மகளின் பெயருக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிகிறது.

இது குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம்  ராஜா புகார் அளித்தார். ஆட்சியர் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக மகள்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் வீட்டை ஏமாற்றி பெற்றது தெரியவந்தது. இதனையடுத்து மகள் ஏமாற்றி பெற்ற வீடு மீட்கப்பட்டு தந்தை ராஜாவிடம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் ஒப்படைத்தார்.

Related Stories: