மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகிய சிவசேனா கட்சியை சேர்ந்த அரவிந்த் சாவந்த்தின் ராஜினாமா ஏற்பு

டெல்லி: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகிய சிவசேனா கட்சியை சேர்ந்த அரவிந்த் சாவந்த்தின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார். சிவசேனா கட்சிக்கு ஆதரவு தேவையெனில் பாஜகவின் கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நிபந்தனை விதித்திருந்தார். இதையடுத்து சிவசேனாவை சேர்ந்த மத்திய கனரக தொழில், பொதுத்துறை நிறுவனத்துறை அமைச்சர் அரவிந்த் சாவந்த் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்திருந்த நிலையில், அரவிந்த் சாவந்த்தின் ராஜினாமா கடிதத்தை குடியரசுத்தலைவர் ஏற்றுக்கொண்டார்.

Related Stories: