டெல்லி: இந்தியா அடுத்த பத்து, பதினைந்து ஆண்டுகளில், 10 லட்சம் கோடி டாலர்கள் பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக திகழும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருக்கிறார். தளவாட உற்பத்தி மற்றும் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும், டெஃப்-கனெக்ட் என்ற கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை டெல்லியில் தொடங்கி வைத்து உரையாற்றிய அவர், இதனைக் கூறியிருக்கிறார். வருகிற 2024ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை 5 லட்சம் கோடி டாலர்கள் பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக உயர்த்த பிரதமர் இலக்கு நிர்ணயித்திருப்பதை ராஜ்நாத் சிங் சுட்டிக்காட்டினார்.