புதுடெல்லி: ‘‘அயோத்தியில் சர்ச்சைக்குரிய நில விவகாரம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு பற்றி மத்திய அமைச்சர்கள் யாரும் தேவையில்லாமல் பேசக்கூடாது. சர்ச்சை கருத்தை வெளியிடக்கூடாது’’ என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.அயோத்தி சர்ச்சைக்குரிய நில விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வரும் 17ம் தேதிக்குள் தீர்ப்பு வழங்க உள்ளதால் நாடு முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். 10ம் தேதிக்கு பிறகு தமிழக போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் விடுமுறை எடுக்கவும் தடை விதித்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடி அயோத்தி தீர்ப்பு பற்றி பேச மத்திய அமைச்சர்களுக்கு கட்டுப்பாடு விதித்திருக்கிறார்.