நடிகை சரிதாநாயர் அப்பீல் மனுதாக்கல்

கோவை:  நடிகை சரிதா நாயர், இவரது முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், மேலாளர் ரவி ஆகியோர் கோவையில் சோலார் பேனல் மற்றும் காற்றாலை மின் உபகரணங்கள் விநியோகிக்கும் நிறுவனம் நடத்தி வந்தனர். இதில் ரூ.44 லட்சம் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இவர்கள் மூவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை ேஜ.எம். கோர்ட் கடந்த 30ம் தேதி தீர்ப்பளித்தது. மேல்முறையீடு செய்வதற்காக 14ம் தேதி வரை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் கோவை மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நடிகை சரிதாநாயர் தரப்பில் நேற்று முன்தினம் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Related Stories: