எங்கள் அணியின் பேட்டிங் சிறப்பாகவே அமைந்துள்ளது. எனவே பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறேன். ஆனால், ஆடுகளத்தின் தன்மையை பொருத்து தேவையான முடிவுகளை எடுப்போம். முதல் போட்டியில் டெல்லி ஆடுகளத்துக்கேற்பவே வேகப் பந்துவீச்சு கூட்டணியை அமைத்தோம். ராஜ்கோட் பிட்ச்சை பார்த்த பிறகு பந்துவீச்சு வியூகத்தை இறுதி செய்வோம். இந்த ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருப்பதுடன், பந்துவீச்சாளர்களுக்கும் ஓரளவு ஒத்துழைக்கும். டெல்லியை விட சிறப்பான ஆடுகளமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.