ஆலந்தூர் தெற்கு திமுக சார்பில் டெங்கு நோய் கண்டறியும் ரத்த பரிசோதனை முகாம்

ஆலந்தூர்: ஆலந்தூர் தெற்கு திமுக சார்பாக இலவச டெங்கு நோய் கண்டுபிடிப்பு ரத்த பரிசோதனை முகாம் ஆதம்பாக்கத்தில் நேற்று நடந்தது.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடந்த முகாமில் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன், மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு மருந்துகள், மாத்திரைகளை இலவசமாக வழங்கினர்.

இதில் பகுதி செயலாளர்கள் என்.சந்திரன், பி.குணாளன், மாவட்ட நிர்வாகிகள் எம்.எஸ்.கே.இப்ராகிம், கோல்ட் பிரகாஷ், வட்ட செயலாளர்கள் கே.ஆர்.ஜெகதீஸ்வரன், நடராஜன், வேலவன், ஏசுதாஸ் மாவட்ட பிரதிநிதிகள் எஸ்.ரத்தினம், லியோ பிரபாகரன், ஜி.ரமேஷ், சேது செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ரத்த பரிசோதனை செய்துகொண்டனர்.

Related Stories: