வேலூர்: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். முருகனை சிறை நிர்வாகம் கொடுமைப்படுத்துவதாக கூறி நளினி கடந்த 26ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்தார். 11வது நாளான நேற்று முன்தினம் ஜெயிலர் அல்லிராணி நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து நளினி உண்ணாவிரதத்தை கைவிட்டார். அதேபோல் தன்னை தனியறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதாக கூறி முருகன் தொடர்ந்து 21வது நாளாக நேற்றும் உண்ணாவிரதம் இருந்தார்.