அம்பத்தூர்: கொரட்டூர் கோபாலகிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் மகேஷ்குமார் (34). இருசக்கர வாகன மெக்கானிக். இவர், கடந்த வாரம் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக மனைவி, குழந்தைகளுடன் பாடிக்குப்பம் சென்றார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை மகேஷ்குமார் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவருக்கு தகவல் கொடுத்தனர். உடனே மகேஷ்குமார் குடும்பத்துடன் விரைந்து வீட்டுக்கு வந்து பீரோவை பார்த்தபோது அதில் வைத்திருந்த 11 சவரன் நகைகள் கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது.
* மாங்காடு அடுத்த சிக்கராயர்புரத்தை சேர்ந்தவர் அரவிந்த் (38). கட்டிட கான்ட்ராக்டர். இவரது மனைவிக்கு கடந்த 2 தினங்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை பார்ப்பதற்காக அரவிந்த், நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.