புர்த்வான்: நாட்டு பசுவின் பாலில் தங்கம் உள்ளதால் அதை அருந்தும் நமது உடல் ஆரோக்கியமாக திகழ்கிறது என மேற்கு வங்க பாஜ தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநில பாஜ தலைவரும் மக்களவை உறுப்பினருமான திலிப் கோஷ் அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களை கூறி சிக்கலில் மாட்டிக்கொள்வார். இந்த நிலையில் நேற்றும் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு திலிப் கோஷ் அளித்த பேட்டியில் கூறியதாவது: சில புத்திசாலிகள் மாடுகளின் இறைச்சியை சாப்பிடுகிறார்கள். அவர்கள் ஏன் நாய் இறைச்சியை சாப்பிடக்கூடாது. அவர்கள் எந்த இறைச்சியையும் சாப்பிடட்டும். அதை வீட்டில் வைத்து சாப்பிடுங்கள். ஏன் சாலைகளில் சாப்பிடுகிறீர்கள்?