போர்லேண்ட்: அமெரிக்காவில் புதிதாக குடியேறுபவர்களுக்காக அதிபர் டொனால்ட் டிரம்ப் கொண்டு வந்த புதிய சுகாதார காப்பீடு விதிமுறை திட்டத்தை அமல்படுத்துவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.அமெரிக்காவில் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் குடியேறுவதாக இருந்தால், அந்நாட்டு சட்டத்தின்படி சுகாதார காப்பீடு ெபற்றிருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால், அவர்களால் அமெரிக்காவுக்குள் நுழைய முடியாத வகையில் குடியேற்ற விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும், காப்பீடு இல்லாதவர்கள், தங்களுக்கான மருத்துவ செலவுகளை தாங்களே செலுத்திக் கொள்ளும் தகுதியை பெற்றவர்களாக இருக்க வேண்டும். இந்த வசதி இல்லாதவர்கள், அமெரிக்காவில் வாழ அனுமதிக்கப்பட மாட்டார்கள். விசாவும் கிடைக்காது. அதிபர் டிரம்ப்பால் கொண்டு வரப்பட்ட இந்த புதிய விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வர இருந்தன.