புதுடெல்லி: இந்திய அணியுடனான முதல் டி20 போட்டியில், வங்கதேச அணிக்கு 149 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்தியா வந்துள்ள வங்கதேச அணி 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டி, டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று இரவு நடந்தது. டாசில் வென்ற வங்கதேச அணி கேப்டன் மகமதுல்லா முதலில் பந்துவீச முடிவு செய்தார். இந்திய அணியில் ஷிவம் துபே (26 வயது), வங்கதேச அணியில் முகமது நயிம் (20 வயது) அறிமுக வீரர்களாக இடம் பெற்றனர்.கேப்டன் ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் இருவரும் இந்திய இன்னிங்சை தொடங்கினர். ரோகித் 9 ரன் மட்டுமே எடுத்து ஷபியுல் இஸ்லாம் பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆனார். அடுத்து தவானுடன் லோகேஷ் ராகுல் இணைந்தார். ராகுல் 15 ரன் எடுத்து வெளியேற, அடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடியாக 22 ரன் (13 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி அமினுல் இஸ்லாம் பந்துவீச்சில் நயிம் வசம் பிடிபட்டார்.