புதுச்சேரி அதிமுக மாநில செயலாளரான முன்னாள் எம்.எல்.ஏ. விஷ வண்டு கடித்து பலி

விக்கிரவாண்டி: புதுச்சேரி அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன் (67). இவர் புதுச்சேரி மாநில அதிமுக செயலாளராக உள்ளார். மணவெளி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வான இவருக்கு விக்கிரவாண்டி அருகே உள்ள சிறுவள்ளி குப்பத்தில் விவசாய நிலங்கள் உள்ளது. தினமும் நிலத்திற்கு வந்து விவசாயம் செய்து வந்தார். நேற்று வழக்கம்போல் நிலத்திற்கு வந்தவர்  பிற்பகல் 1.15 மணியளவில் மழை பெய்ய ஆரம்பித்தபோது மரத்தின் அருகே ஒதுங்கினார்.

அப்போது மரத்தில் இருந்த விஷ வண்டுகள் அவரை விரட்டி விரட்டி கடித்தது. இதில் அவர் மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்தபோது ஏற்கனவே  இறந்துவிட்டதாகக தெரிவித்தனர்.

Related Stories: