மெல்போர்ன்: இலங்கை அணியுடன் நடந்த 3வது டி20 போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ஆஸி. அணி முதலில் பந்துவீசியது. இலங்கை 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 142 ரன் எடுத்தது. குசால் பெரேரா 57 ரன் (45 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), அவிஷ்கா பெர்னாண்டோ 20 எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் எடுக்கத் தவறினர். ராஜபக்ச 17 ரன், கேப்டன் மலிங்கா 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.