ராஞ்சி: ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 30ம் தேதி முதல் 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் 81 தொகுதிகள் கொண்ட சட்டப்பேரவைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடக்கவுள்ளது. முதற்கட்டமாக 13 தொகுதிகளுக்கு நவம்பர் 30ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து டிசம்பர் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.