பெங்களூரு: பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு நகைகளை திருடி வந்த 5 நேபாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.பெங்களூரு நகரில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு மர்ம நபர்கள் திருடி வருவதாக போலீசாருக்கு புகார் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து திருடர்களை தேடி வந்தனர். குறிப்பாக வெளி மாநிலத்தில் இருந்து பெங்களூரு வந்து தங்கியிருந்த திருடர்களை குறி வைத்து இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று ஒயி்ட்பீல்டு போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர்கள் நேபாளம் பஜ்காங் மாவட்டத்தை சேர்ந்த மங்கல் சிங், மனோஜ் பகதூர், சுதீப் தமணி, விஷால், வினோத்குமார் என்று தெரியவந்தது. இவர்களிடம் நடத்திய சோதனையில் ரூ.4.50 லட்சம் மதிப்பிலான 7.50 கிலோ எடை கொண்ட சில்வர் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.