புதுடெல்லி: போக்குவரத்து போலீசாரால் அபராதம் விதிக்கப்பட்ட ஆசாமி ஒருவர் குடிபோதையில் தனது பைக்கிற்கு தானே தீ வைத்து எரித்து ஆத்திரத்தை தீர்த்துக்கொண்ட சம்பவம் தெற்கு டெல்லியின் சாகேத் பகுதியில் அரங்கேறியுள்ளது. தெற்கு டெல்லியின் சாகேத் பகுதியில் உள்ள கோகா மார்க்கெட் பகுதியில் பார்க்கிங்கிற்கு இடையூறாக நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்ட இரு சக்கர வாகனத்தை சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்தர் அ்ங்கிருந்து அப்புறப்படுத்தி தற்காலிகமாக புஸ்ப் விகார் பகுதியில் நிறுத்தி வைத்தார். இதனால் போலீசார் 500 அபராதம் விதித்தனர்.