புதுடெல்லி: ஜெய் சிங் மார்க்கில் கட்டப்பட்டுள்ள டெல்லி காவல்துறையினருக்கான புதிய 17 மாடிகளை கொண்ட தலைமை அலுவலக கட்டிடத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று திறந்து வைத்தார். டெல்லி போலீஸ் தலைமைகயம் முதன் முதலாக காலனித்துவ ஆட்சி காலத்தில் கடந்த 1912ம் ஆண்டு காஷ்மீரி கேட் பகுதியில் செயல்பட்டு வந்தது. அதன்பின், இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் காஷ்மீரி கேட் பகுதிக்கு கடந்த 1970ம் ஆண்டு மாற்றப்பட்ட நிலையில், கடந்த 1976ம் ஆண்டில் காஷ்மீரி கேட் பகுதியிலிருந்து ஐடிஓ பகுதியில் தற்போதுள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. வருமான வரித்துறை அலுவலகம் உள்ள இந்த பகுதியில் கடந்த 44 ஆண்டுகளாக இங்கு செயல்பட்டு வந்தது. இந்நிலையில், இந்தியாவின் முதலாவது உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலின் 144 வது பிறந்த தினத்தையொட்டி, நேற்று ஜெய்சிங் மார்க்கில் டெல்லி காவல் துறையின் புதிய கட்டிடத்தை தற்போதைய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார். இதையடுத்து, டெல்லி போலீஸ் தலைமை அலுவலகம் நேற்று புதிதாக திறக்கப்பட்ட 17 மாடி கட்டிடத்துக்கு மாற உள்ளது.
17 அடுக்குமாடிகளுடன் டெல்லி காவல் துறையின் புதிய தலைமை அலுவலக கட்டிடம் : அமித்ஷா திறந்து வைத்தார்
- டெல்லி காவல் துறை தலைமை அலுவலக கட்டிடம்: அமித் ஷா
- குடியிருப்புகள்
- புது தில்லி போலீஸ் தலைமையக கட்டிடம்