ராஜபாளையத்தில் அய்யனார் கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

ராஜபாளையம்: கனமழை காரணமாக, ராஜபாளையம் அய்யனார் கோயில் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் நகராட்சி நீர் தேக்கம் உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்யும் போது, அய்யனார் கோயில் ஆறு மூலம்  இந்த நீர் தேக்கத்திற்கு தண்ணீர் வரும். இப்பகுதியில் சில வருடங்களாக போதிய அளவில் மழை பெய்யவில்லை.

இதனால் அய்யனார் கோயில் ஆற்றில் குறைந்த அளவிலேயே நீர்வரத்து இருந்தது. இதன் காரணமாக நகராட்சி நீர் தேக்கத்தில் போதிய  அளவில் நீரை தேக்க முடியாததால், விவசாய பாசனத்திற்கும், ராஜபாளையம் நகராட்சிக்கு குடிநீர் விநியோகிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது.இந்நிலையில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அய்யனார் கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நீர்தேக்கம் வேகமாக  நிரம்பி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: