கேரளாவில் இன்று கனமழை பெய்யும்

திருவனந்தபுரம்: கேரளாவில் திருவனந்தபுரம் உட்பட தென் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் கடந்த இரு வாரங்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த இரு தினங்களாக மழையின் தீவிரம் சற்று குறைந்திருந்தது. இந்த நிலையில் வங்காள விரிகுடா கடலில் இலங்கையின் தெற்கு பகுதியில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. வடக்கு நோக்கி நகரும் இந்த தாழ்வு மண்டலம் கன்னியாகுமரி அருகே வலுப்பெறும் என  திருவனந்தபுரம் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து இன்று கேரளாவின் தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: