ஆரணி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் நோயாளி இறந்ததாக புகார்

தி.மலை : ஆரணி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் நோயாளி இறந்ததாக புகார் கூறப்படுகிறது. ஆரணி அருகே நுந்தரிகம்பட்டுவை சேர்ந்த மணிகண்டன் இரு சக்கர வாகன விபத்தில் சிக்கினார். விபத்தில் சிக்கிய மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். மருத்துவர்கள் வேலைநிறுத்தம் காரணமாக போதிய சிகிச்சை தராததால் மணிகண்டன் இறந்ததாக உறவினர்கள் புகார் கூறுகின்றனர். மணிகண்டன் இறந்ததை அடுத்து அரசு மருத்துவமனை ஊழியர்களிடம் உறவினர்கள் வாக்குவாதம் செய்தனர்.

Related Stories: