வளரும் நாடுகள் மற்றும் உலக பொருளாதார வளர்ச்சிக்கு நிலையான கச்சா எண்ணெய் விலை இன்றியமையாதது : பிரதமர் மோடி

சவுதி அரேபியா : வளரும் நாடுகள் மற்றும் உலக பொருளாதார வளர்ச்சிக்கு நிலையான கச்சா எண்ணெய் விலை இன்றியமையாதது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறைப் பயணமாக சவுதி சென்றடைந்தார். சவுதி அரேபிய மன்னரின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று சவுதி அரேபியாவுக்கு சென்றார். கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் ரியாத் மாகாண ஆளுநர் பைசல் பின் பந்தர் அல் சவுத் வரவேற்றார். இதையடுத்து அரேபியா செய்தித் துறைக்கு பேட்டி அளித்த பிரதமர் நரேந்திர மோடி, தீவிரவாத எதிர்ப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இந்தியா, சவுதி அரேபியா ஆகிய இரு நாடுகள் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சி தருகிறது என்று கூறினார்.மேலும் இந்தியா - சவுதி அரேபியா ஆகிய 2 நாடுகளுமே பாதுகாப்பு விவகாரத்தில் அண்டை நாடுகளால் ஒரே மாதிரியான பிரச்சினையை எதிர்க்கொண்டு வருவதாகவும் மோடி எடுத்துரைத்தார்.

Related Stories: