காஷ்மீர்: ஜம்மு, காஷ்மீர் மாநிலம் சோபூரில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 20க்கும் அதிகமான அப்பாவி மக்கள் படுகாயம் அடைந்தனர். அதில் அரை டஜனுக்கும் அதிகம் பேர் கவலைக்கிடமாக உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.சோபூர் நகரில் உள்ள பஸ் நிறுத்தம் ஒன்றில் ஏராளமானோர் பஸ்சுக்காக நேற்று காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த தீவிரவாதிகள் பஸ் நிறுத்தத்தில் இருந்தவர்கள் மீது வெடிகுண்டு வீசி யுள்ளனர். குண்டு வெடித் தத்தில் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.காதைப் பிளக்கும் சத்தத்துடன் குண்டு வெடித்ததும், பலரும் அலறியடித்து ஓடத் தொடங்கினர். எதிர்பாராத இந்த தாக்குதலில் சிக்கி 20க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்களில் 6 பேர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.