சென்னை: ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி குறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். 3 அமைச்சர்கள் மற்றும் நிபுணர்கள் நவீன கருவிகளுடன் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக பிரதமர் மோடியிடம் முதல்வர் தகவல் தெரித்தார். மேலும் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து 72 மணி நேரமாக நடைபெற்று வருகிறது என கூறினார். மீட்பு பணிகளை கண்காணிக்க 3 அமைச்சர்கள், ஆட்சியர்கள், வருவாய்த்துறை செயலர் உள்ளிட்டோர் மீட்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர் என கூறினார். மீட்பு பணிகளின் நிலையபை் பொறுத்து மேலும் உதவி கோரப்படும் என முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். கனரக துளையிடும் வாகனங்கள் மூலம் துளையிடும் பணி நடைபெற்று வருகிறது என கூறினார். என்.எல்.சி., ஓஎன்ஜிசி, என்ஐடி, எல்&டி வல்லுநர்கள் களத்தில் உள்ளனர் என கூறினார். ஒவ்வொரு முயற்சியும் ஒவ்வொரு கட்டத்தில் பின்னடைவை ஏற்படுத்தியதாக கூறினார். தீயணைப்பு, மீட்புப் படைகள், பேரிடர் குழுவினர் என பல அதிகாரிகள் களத்தில் உள்ளதாக கூறினார்.