மும்பை : பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி குளறுபடி போன்ற காரணங்களால் தீபாவளி பண்டிகை களையிழந்து காணப்பட்டதாக சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது. ஆட்சியின் அதிகாரபூர்வ நாளேட்டில் வெளியான கட்டுரையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. பொருளாதார மந்தநிலை நாடு முழுவதும் காணப்படுவதாக சிவசேனா சுட்டிக் காட்டியுள்ளது. பட்டாசுகள் வாங்குவதற்கு காணப்படும் உற்சாகம் கடைகளில் இல்லை என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. பொருளாதாரம் மந்தம் அடைந்ததால் சந்தையில் 40% வரை விற்பனை குறைந்து காணப்பட்டதாக சிவசேனா கூறியுள்ளது.