திருவள்ளூர்: இந்த ஆண்டு தீபாவளி வியாபாரம் மிகவும் மோசமாக அமைந்துள்ளதாக அனைத்து தரப்பு வியாபாரிகளும் கவலை அடைந்துள்ளனர். தீபாவளி பண்டிகை நாளில் வழக்கத்திற்கு மாறாக ஆடு, கோழி இறைச்சி விற்பனை பல மடங்கு அதிகமாக விற்பனையாவது வழக்கம். இவைகளின் விலை வழக்கத்தை விட அன்று அதிகமாக இருக்கும். ஆனால் இந்த தீபாவளிக்கு இறைச்சி விற்பனை தலைகீழாக மாறிவிட்டது.பொதுவாக செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய கிழமைகளில் மாமிச உணவுகளை பலர், சாப்பிட மாட்டார்கள். இவ்வாண்டு தீபாவளி ஞாயிற்று கிழமையில் வந்தாலும், அன்றைய தினம் கல் 12.10 மணிக்கு அமாவாசை பிறந்ததால், அசைவ உணவினை மக்கள் தவிர்த்தனர்.இதனால் தீபாவளி பண்டிகை இறைச்சி விற்பனை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று (28ம் தேதி) கந்தசஷ்டி துவங்குகிறது. நாளை குரு பெயர்ச்சி. வரும் 2ம் தேதி இரவு கந்தசஷ்டி விரதம் சூரசம்மாரம் நடந்த பிறகு முடிகிறது.