புதுடெல்லி: நாட்டின் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்டு வரும் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடங்களுக்கான கட்டுமான ஒப்பந்தங்களை தங்களுக்கு தருமாறு மத்திய சுகாதாரத் துறையை பொதுப்பணி துறை வலியுறுத்தி உள்ளது. மத்திய அரசின் மிகப் பெரிய கட்டுமான நிறுவனமான பொதுப்பணித் துறை மத்திய, மாநில அரசுகள் மற்றும் இதர நிறுவனங்களுக்காக, ஒப்பந்தத்தின் அடிப்படையில், கட்டிடங்கள் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இது தவிர நட்பு ரீதியில் வெளிநாடுகளிலும் கட்டுமான பணியில் திறம்பட செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பொதுப்பணித் துறையின் இயக்குனர் ஜெனரல் பிரபாகர் சிங், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தனுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: அண்மை காலங்களில் பொதுப்பணித் துறையின் செயல்பாடுகளில் அடிப்படை சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான ஒப்பந்தங்களை எங்களுக்கே கொடுங்கள்: மத்திய பொதுப்பணித் துறை கடிதம்
- எய்ம்ஸ் மருத்துவமனை: கூட்டாட்சி பொதுப்பணித் துறை கடிதம்
- எங்களுக்கு கட்டுமான ஒப்பந்தத்தை வழங்குவதற்கான எய்ம்ஸ் மருத்துவமனை: மத்திய பொதுப்பணித் துறை