சென்னை: பீகார் மாநிலம் கயாவில் தேசிய அளவிலான 15வது இளம் வீரர்களுக்கான, 32வது ஜூனியர் பெண்களுக்கான, 56வது ஆண்களுக்கான பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் தமிழகத்தில் இருந்து 17 வீரர்கள், 12 வீராங்கனைகள் பங்கேற்றனர்.இளம் வீரர்களுக்கான 89 கிலோ எடை பிரிவில் லோக்சந்த், 102 கிலோ எடை பிரிவில் ருத்ரமாயன் ஆகியோர் தங்கம் வென்றனர். 81 கிலோ பிரிவில் அருள் பாண்டியன், 96 கிலோ பிரிவில் ராம்குமார் ஆகியோர் வெள்ளி பதக்கங்களை ஈட்டினர். மேலும், 49 கிலோ பிரிவில் பாலாஜி, 55 கிலோ பிரிவில் மாதவன் ஆகியோர் வெண்கலம் பெற்றனர். அதுபோல், ஜூனியர் வீராங்கனைகளுக்கான 64 கிலோ எடை பிரிவில் பூர்ணா, 71 கிலோ எடை பிரிவில் லேகா மால்யாஆகியோர் தங்கம் வென்றனர்.