சண்டிகர்: அரியானாவில் தங்களின் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கும் ஆதரவு அளிக்கப்படும் என்று ஜனநாயக ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. அரியானா மக்களுக்கு வேலை வாய்ப்பில் 75 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கை நிறைவேற்றும் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக துஷ்யந்த் தெரிவித்துள்ளார். அரியானாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் பாஜ ஆட்சி நடந்து வந்தது. இங்குள்ள 90 பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நடந்த தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியானது. இதில், பாஜ. 40 இடங்களையும், காங்கிரஸ் 31 இடங்களையும் பிடித்துள்ளன.
அரியானாவில் தங்களின் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கும் ஆதரவு அளிக்கப்படும் : துஷ்யந்த் சவுதாலா
- கட்சி
- அரியானா
- சட்டசபை தேர்தல்
- துஷ்யந்த் ச ud டலா. அரியானா
- ஜனநாயக
- காங்கிரஸ்
- ஜனதா கட்சி
- பாஜக
- துஷ்யந்த் ச ud டலா