முதல்வர் எடப்பாடியை புகழேந்தி சந்தித்து பேசியதில் தவறு ஏதும் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: சசிகலா குடும்பத்தை தவிர அமமுகவில் இருந்து வேறு யார் வந்தாலும் அதிமுகவில் சேர்ப்பது பற்றி கட்சி தலைமை முடிவு செய்யும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், முதல்வர் எடப்பாடியை புகழேந்தி சந்தித்து பேசியதில் தவறு ஏதும் இல்லை என்று கூறியுள்ளார். மேலும், அரபிக்கடலில் தத்தளிக்கும் தமிழக மீனவர்களை மீட்க 2 ஹெலிகாப்டர்கள் சென்றுள்ளன என்று அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: