ஜம்மு: காஷ்மீரில் வட்டார வளர்ச்சி கவுன்சில் தலைவர்களை தேர்வு செய்வதற்கான (பிடிசி) தேர்தல் நேற்று நடைபெற்றது. முன்னதாக 27 வட்டார வளர்ச்சி கவுன்சில் தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து நேற்று 310 பிடிசிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 22 மாவட்டங்களில் நடைபெற்ற இந்த தேர்தலில் 1065 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்தம் 26,629 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.