திண்டிவனம்: திண்டிவனம் அருகே நேற்று இரவு பெய்த லேசான மழையினால் சாலையேரம் இருந்த மிகப்பெரிய புளிய மரம் சாய்ந்தது. இரவு முழுவதும் அகற்றப்படாததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திண்டிவனம் பகுதியில் நேற்று காற்றுடன் லேசான மழை பெய்தது. இதில் திண்டிவனம்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் அடுத்த பெலாகுப்பம் ஓம்சக்தி கோயில் எதிரே சாலை ஓரத்தில் உள்ள மிகப் பெரிய புளியமரம் சாலையில் முறிந்து விழுந்தது. புளியமரம் சாய்ந்ததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.